அய்யனார் துணை சோழன் கதாபாத்திரத்தால் அரவிந்திற்கு நடந்த விஷயம்… அவரே பகிர்ந்த தகவல்

அய்யனார் துணை
4 அண்ணன் தம்பிகள், இதில் தம்பிக்கு மட்டுமே யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் திருமணம் நடந்தது.
வீட்டிற்கு வந்த பெண்ணால் 4 அண்ணன்-தம்பிகளின் வாழ்க்கையே அப்படியே நல்லவிதமாக மாறுகிறது. ஆனால் அண்ணனுக்கு மட்டும் திருமணம் நடந்தபாடில்லை, ஒவ்வொரு முறையும் ஏற்பாடு செய்யப்பட்டு நின்றுவிடுகிறது.
சேரன்-சந்தாவை சேர்த்து வைக்கும் போராட்டத்தில் தான் இப்போது சோழன் மற்றும் நிலா இறங்கியுள்ளனர். சேரன் பிரச்சனை சென்று கொண்டிருக்க இன்னொரு பக்கம் பாண்டி-வானதி பிரச்சனை தொடங்கியுள்ளது.
பாண்டி நீ சரியான டார்ச்சர் என்று சொன்னதால் இனி எனக்கு பாண்டி வேண்டாம் வேறு மாப்பிள்ளை பாருங்கள் என்று வானதி கூறிவிட்டார்.
அரவிந்த்
சோழனாக அய்யனார் துணை சீரியலில் நடிக்கும் அரவிந்த் ஒரு பேட்டியில், முதல்ல எல்லாம் சோழன் கதாபாத்திரம் வாயத் திறந்தாலே பொய் சொல்றான்னு என்னைத் திட்டுனாங்க.
ஆனா இப்போது அதே மக்கள், அவன் பொய் சொன்னாலும் எவ்வளவு அழகா பேசுறான்னு அந்தப் பொய்யையும் என்னோட அந்தச் சின்னச் சின்ன ஃபிராடு தனத்தையும் ரசிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
நிறைய பேர் மெசேஜ் பண்ணி, நாங்க ரொம்ப டிப்ரஷன்ல இருந்தோம், உங்க கேரக்டர் தான் எங்களுக்கு ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டரா இருக்கு என்று சொல்லும் போது சந்தோஷமாக இருக்கிறது என கூறியுள்ளார்.






