22 வயது சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் சின்னத்திரை ரசிகர்கள்

பிரபல சின்னத்திரை நடிகை சஞ்சிதா உகாலே அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
22 வயதாகும் சஞ்சிதா உகாலே ஹிந்தியில் பிரபல சீரியலான குங்கும் பாக்யா தொடரில் முக்கிய ரோலில் நடித்தவர். மேலும் அவர் Chhaava, Silence 2: The Night Owl Bar Shootout உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து இருக்கிறார்.
தற்கொலை
நேற்று ஞாயிற்றுகிழமை அவர் மும்பையில் இருக்கும் அவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் மாலை 7 மணிக்கு fanல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அது பற்றி வந்த தகவலை வைத்து போலீசார் அங்கே சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
வீட்டில் சந்தேகப்படும்படி எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்றும், அவர் தற்கொலை கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைக்கு உடல் அனுப்பப்பட்ட நிலையில், தற்கொலைக்கு காரணம் என்ன என விசாரணை செய்து வருகின்றனர்.






