சென்சேஷனல் நடிகை ருக்மிணி வசந்தின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா!!

ருக்மிணி வசந்த்
கன்னட திரையுலகில் சப்த சாகரதாச்சே எல்லோ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ருக்மிணி வசந்த்.
இதை தொடர்ந்து காந்தாரா 2 படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்து, பான் இந்தியன் ஹீரோயினாக மாறியுள்ளார். தமிழில் ஏஸ், மதராஸி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அடுத்ததாக யாஷ் உடன் இணைந்து இவர் நடித்துள்ள டாக்சிக் படம் வெளிவரவுள்ளது. இதை தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து டிராகன் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
சொத்து மதிப்பு
பிஸியான கதாநாயகியாக வலம் வரும் நடிகை ருக்மிணி வசந்தின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, நடிகை ருக்மிணியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 7 கோடி என்றும், இந்த வருடத்தின் இறுதிக்குள் ரூ. 10 கோடியாக உயரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.






