உயிரிழந்த அப்பா, இறுதி காரியம் முடித்தவுடனே படப்பிடிப்பு கிளம்பிய நடிகர்… சீரியல் பிரபலத்தின் எமோஷ்னல் பதிவு

பிரபல நடிகர்
விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் நடித்ததன் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகர் நவீன். இவர் சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் மூலம் மக்களின் கவனத்தை பெற்றார்.
அந்த சீரியல் முடிவடைய தனது மனைவியுடன் Mr&Mrs Chinnathirai நிகழ்ச்சியில் பங்குபெற்றார். தற்போது விஜய் டிவியிலேயே ஒளிபரப்பாகும் அன்புடன் கண்மணி சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார்.
கதையில் அன்பு-கண்மணி இருவரும் சண்டை போட்டு தனித்தனியாக வாழ முடிவெடுக்க சமையல் விஷயத்தால் ஒரே இடத்தில் வேலை செய்வது போல் ஆகிவிட்டது. அவர்களின் பிரச்சனை முடிவதற்குள் இப்போது வெண்ணிலா இடையில் வந்துவிட்டார். கதையில் இனி நடக்கப்போவதை பொறுத்திருந்து காண்போம்.
வருத்தம்
இந்த கண்மணி அன்புடன் சீரியலில் நாயகனாக நடிக்கும் நவீன் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருப்பவர்.
கடந்த மாதம் நவீனின் அப்பா உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டாராம். அவரது இறுதிச்சடங்குகள் முடித்த கையோடு உடனே சீரியல் படப்பிடிப்பில் கலந்துகொண்டாராம்.
அப்பாவை இழந்த சோகம் இருந்தாலும் 4வது நாளே படப்பிடிப்பில் கலந்துகொண்டாராம். நடிகர்களின் வாழ்க்கையே இப்படித்தான், மனதில் சோகம் இருந்தாலும் மற்றவர்களை சிரிக்க வைக்க வேண்டும், சந்தோஷமாக இருப்பது போல் காட்ட வேண்டும் என வீடியோ பதிவு போட்டுள்ளார்.






