ஹனிமூன் கிளம்ப போகும் நேரத்தில் சோழனுக்கு ஷாக் கொடுத்த நிலா, என்ன நடக்கப்போகுதோ?… அய்யனார் துணை எபிசோட்

அய்யனார் துணை
சோழன்-நிலா திருமணம் ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத ஒரு கதைக்களமாக கடந்த சில நாட்களுக்கு முன் அமைந்தது. திருமணம் முடிந்ததும் திடீரென நிலா அப்பா விரும்பியதால் அவர்களது ஊரில் ரிசப்ஷன் படு பிரம்மாண்டமாக நடந்தது.
அந்த நிகழ்ச்சியில் மனோகர் சோழன் குடும்பத்தை அசிங்கப்படுத்தி வந்தார், ஆனால் நிலா கடைசியாக பேசிய விஷயத்தால் அவரது அம்மா-அப்பா மிகவும் வருந்தினார்கள். ரிசப்ஷன் முடிந்த கையோடு வீட்டிற்கு வந்த நிலா மீண்டும் தனது வாழ்க்கையை நடத்த துவங்கிவிட்டார்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், சோழன் நிலா ஹனிமூன் வேண்டாம் என கூறியது குறித்து மிகவும் குழப்பத்தில் உள்ளார்.
இரவு நிலா வேண்டாம் என கூறியதும் குழம்பிய சோழன் பாண்டியிடம் பேசினார், அவர் பெண்களுக்கு அடிக்கடி Mood Swing வரும் நாம் தான் சமாளிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
பின் நிலாவிடம் காலையில் மீண்டும் சோழன்- நிலாவிடம் சென்று ஹனிமூன் குறித்து பேசுகிறார், கடைசியில் எப்படியோ செல்ல முடிவு எடுத்துவிட்டார்கள்.
புரொமோ
சோழன் ஹனிமூன் செல்லும் விஷயத்தை சேரனிடம் கூற அவர் பத்திரமாக செல்லுங்கள் என்கிறார்.
சோழன் நாம் இருவரும் காரில் ஜாலியாக செல்வோம் என கூற பல்லவன் வாழ்த்து கூறுகிறார். பின் சோழன் தண்ணீர் குடிக்கும் நேரத்தில் திடீரென நிலா நாம் அனைவரும் செல்வோம் என கூற சோழன் செம ஷாக் ஆகிறார். பல்லவனும் நாம் போலாம் என கூற சோழன் நிலைமை பார்க்கவே பாவமாக தெரிகிறது.






