பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை.. அதிர்ச்சியில் சினிமா துறையினர்

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருந்தவர் கே.ராஜன். பிரம்மச்சாரிகள், டபுள்ஸ், நினைக்காத நாளில்லை போன்ற படங்களை அவர் தயாரித்து இருக்கிறார்.
அவர் அவ்வப்போது பட விழாக்களில் பேசும்போது சர்ச்சையாக பேசி வைரல் ஆவதும் உண்டு.
தற்கொலை
கே.ராஜன் இன்று சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு இருக்கின்றனர்.
பிரபல தயாரிப்பாளரின் தற்கொலை சினிமா துறையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது விபரீத முடிவு அதிர்ச்சி அளிப்பதாக பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.






