விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் முதல் விமர்சனம்..

விஸ்வநாத் & சன்ஸ்
கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் விஸ்வநாத் & சன்ஸ் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் இதற்கு முன் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆனது குறிப்பிடத்தக்கது.
விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதுவரை இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக ‘பட்டாம்பூச்சி’ எனும் பாடல் உலகளவில் டிரெண்டாகியுள்ளது.
முதல் விமர்சனம்
விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் வெளிவர இன்னும் 12 நாட்கள் உள்ள நிலையில், இப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு விநியோகஸ்தர் ஒருவர் தனது (X) தள பக்கத்தில் இப்படம் எப்படி உள்ளது என்பது குறித்து விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விஸ்வநாத் & சன்ஸ் சூர்யா அண்ணாவின் அடுத்த மக்கள் கொண்டாடும் படமாக அமையப்போகிறது. திரையரங்கை விட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் வருவீர்கள். 2026 அண்ணாவிற்கே சொந்தம்” என கூறியுள்ளார். இதன் மூலம் படம் சிறப்பாக வந்துள்ளது என தெரிகிறது.






