நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்… பரபரப்பு தகவல்

நடிகர் விமல்
நடிகர் விமல் நடித்த மன்னர் வகையறா திரைப்படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக பைனான்சியர் கோபியிடம் இருந்து ரூ. 4.5 கோடி கடனாக பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த கடனை திருப்பி செலுத்த நடிகர் விமல் காசோலை வழங்கியுள்ளார், வங்கியில் போதிய பணம் இல்லாத காரணத்தால் திரும்பியதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வர நீதிபதி ஆர்த்தி, நடிகர் விமலுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் வாங்கிய கடன் தொகையை நடிகர் விமல் திருப்பி செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டவர் காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
