ஜாய் கிரிசில்டாவிற்கு பிறந்தது தன் குழந்தை என ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்… மகனுடன் வெளியிட்ட போட்டோ

மாதம்பட்டி ரங்கராஜ்
தொழிலில் களமிறங்கி அசுர வளர்ச்சி பெற்ற தொழிலதிபர்களில் ஒருவர் தான் பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ்.
கேட்டரிங் சர்வீஸ் மூலம் பிரபலமானவர் மெஹந்தி சர்க்கஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாகக் கூறி பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா கூறியிருந்தார்.
கடந்த 2023ம் ஆண்டு தங்களுக்கு திருமணம் நடந்ததாகவும், ஆதாரங்களையும் காட்டினார்.
முடிந்த பிரச்சனை
கருவுற்ற நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னிடமிருந்து விலகியதாக ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக ஜாய் கிரிசில்டா காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும், மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார், அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் எனது மகன் ராகாவிற்கு ஒரு தந்தையாகச் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த 6 மாதங்களாக முழு பொறுப்புடனும் அன்புடனும் செய்து வருகிறேன். மகனின் எதிர்காலத்திற்கு முழு பொறுப்புடன் இருப்பேன் என பதிவு போட்டுள்ளார்.






