பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் படப்பிடிப்பில் கவலைப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகை… வீடியோ இதோ

சின்ன மருமகள்
காதலித்து பல போராட்டங்களுக்கு பிறகு தமிழ்ச்செல்வியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சேது.
அதன்பின் மனைவி என்ற அங்கீகாரத்தை அவருக்கு சரியாக வழங்கவில்லை, எப்போது பார்த்தாலும் அவரை சந்தேகப்பட்டுக்கொண்டே இருந்தார். சேது தவறு செய்வதும், பின் தமிழ் அவரை மன்னிப்பதுமாகவே கதை நகர்ந்தது.
கடைசியாக ஏற்பட்ட பிரச்சனையில் தமிழ்ச்செல்வி தனது பொறுமையை இழந்து சேது குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டார். கடைசியாக சீரியலின் எபிசோடில், விபத்தில் சிக்கிய தமிழ்ச்செல்வியை காப்பாற்றி சேது மருத்துவமனையில் சேர்த்தார்.
தமிழ்ச்செல்விக்கும் ஆண் குழந்தை பிறந்தது.
வீடியோ
கதைக்களம் பரபரப்பாக செல்ல தற்போது சின்ன மருமகள் சீரியல் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
அதாவது தமிழ்ச்செல்வி அம்மாவாக நடிக்கும் ரீஹானா, என்ன என்னை அதற்குள் பாட்டி ஆக்கிவிட்டீர்களே என காமெடியாக கேட்டிகிறார்.
இதோ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட கலகலப்பான வீடியோ,






