திருமணத்தை நிறுத்த போராடும் கயல்.. குறுக்கே வந்த பெரியப்பா! கயல் சீரியல் இந்த வார ப்ரோமோ

சன் டிவியின் கயல் சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் அனந்தியின் திருமணம் யாருடன் நடக்கப்போகிறது என்ற கேள்வி தான்.
ஆனந்தி பாலுவை காதலிக்கிறாள் என்ற விஷயம் தெரிந்தும், ஏற்கனவே செய்த நிச்சயதார்த்ததால் மொத்த குடும்பமும் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறது.
திருமண மண்டபத்தில் கயல் உட்கார்ந்து அழ, என்ன ஆனது என அம்மா கேட்கிறார். அப்போது ஆனந்தி வேறு ஒருவரை காதலிக்கிறாள் என்கிற உண்மையை சொல்லிவிடுகிறார் கயல். அதன் பின் கயல் தம்பியும் இந்த விஷயம் பற்றி கத்துகிறார்.
பெரியப்பா
அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுவிட்டு கயலின் பெரியப்பா அங்கே வந்து அவர்களை எச்சரிக்கிறார். இந்த திருமணம் நடந்தே ஆகணும். நடக்கவில்லை என்றால் உங்கள் குடும்பத்தின் உறவே வேண்டாம் என விட்டுவிட்டு போய்விடுவேன் என மிரட்டுகிறார்.
கயல் என்ன செய்ய போகிறார்? இந்த வார ப்ரோமோவை பாருங்க.






