நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்… அய்யனார் துணை சீரியல் எபிசோட்

அய்யனார் துணை
யாரென்றே தெரியாத ஒரு நபரை சூழ்நிலை காரணமாக திருமணம் செய்தவர் நிலா.
பின் திருமணம் ஆகி அவரது வீட்டிற்கு வந்து ஒவ்வொரு விஷயத்தை ஏற்றுக்கொண்டு அங்கிருந்தவர்களையும் சொந்தமாக நினைத்து புகுந்த வீட்டில் வாழ ஆரம்பித்தார். அங்கு பல தடைகள், பிரச்சனைகள் வந்தாலும் குடும்பத்துடன் சேர்ந்து போராடி வந்தார்.
ஆனால் சோழனின் சில குணங்களால் பாதிக்கப்பட்ட நிலா ஒவ்வொரு தவறையும் மன்னித்து வந்தார், கடைசியில் திருமணத்திலேயே தன்னை ஏமாற்றியுள்ளார் சோழன் என்று தெரிந்ததும் நிலா மிகவும் உடைந்துவிட்டார்.
இன்றைய எபிசோட்
வீட்டில் நிலா சேரனிடம், உங்கள் வீட்டுப்பெண்ணை இப்படி யாராவது ஏமாற்றி திருமணம் செய்தார் சேர்ந்து வாழ கூறுவீர்களா என கேட்க சேரன் மாட்டேன் என்கிறார்.
உடனே நிலா வீட்டில் இருக்கும் சேரன், பாண்டி, நடேசன் என அனைவரிடமும் கூறிவிட்டு பல்லவனை பஸ் ஸ்டாண்டு வரை வர அழைத்து செல்கிறார். நிலா வீட்டைவிட்டு சென்றதால் கடும் கோபத்தில் நடேசன் நீ மட்டும் ஏன் இங்கேயே இருக்கிறாய், எங்கேயாவது போய் தொலை என திட்டுகிறார்.
சேரனும் சோழன் செய்த காரியம் நினைத்து கடுமையாக திட்டுகிறார்.
பின் தான் செய்த தவறை ஒப்புக்கொண்ட சோழன் அவரை பிடித்ததால் அந்த சூழ்நிலையை பயன்படுத்தி திருமணம் செய்தேன் என்கிறார்.
கடைசியில் நான் தான் தவறு நான் இந்த வீட்டைவிட்டு செல்கிறேன் என கிளம்பிவிட்டார், குடும்பத்தினர் அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.






