எல்லைமீறிய கூட்டம்.. ஹிப் ஹாப் ஆதி நிகழ்ச்சி ரத்து

இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் ஹிப்ஹாப் ஆதி. அவர் தற்போது ஹீரோ ஆக படங்களில் நடித்து வருகிறார். அவரது படங்களுக்கு அவரே இசையமைப்பதால் பாடல்களும் ஹிட் ஆகின்றன.
அவர் தற்போது மீசைய முறுக்கு 2 படத்தில் நடித்திருக்கும் நிலையில், அது விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதன் ப்ரோமோஷனுக்காக சென்னை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் ஒரு நிகழ்ச்சி இன்று நடைபெற இருந்தது.
நிகழ்ச்சி ரத்து
ஹிப் ஹாப் ஆதி ரசிகர்கள் அதிகம் பேர் மால் உள்ளே கூடியதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்று விட்டது.
அதனால் போலீசார் நிகழ்ச்சியை ரத்து செய்யும்படி கூறிய நிலையில், படகுழு நிகழ்ச்சியை ரத்து செய்து இருக்கிறார்கள். அதனால் ரசிகர்களை ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.
“உங்களுடைய பாதுகாப்பு கருதியும், காவல் துறையின் அறிவுறுத்தலின் படியும் என்னால் மேடை ஏற முடியவில்லை. உங்கள் கட்டுக்கடங்காத அன்பு ஒரு புறம் மகிழ்ச்சி தந்தாலும், உங்களோடு #meesayamurukku2 வை இன்று கொண்டாட முடியவில்லை என்பதில் மிகுந்த வருத்தம்” என ஆதி பதிவிட்டுள்ளார்.
Today’s #MeesayaMurukku2 Celebration event with #HiphopTamizha at Phoenix Market City, Chennai had to be called off this afternoon. Huge Crowd showed up & went beyond what the venue could safely handle, so police stepped in and asked to call of the Event. pic.twitter.com/FfAdtmpcLp
— Viral Cinema (@Viral_Cinema) August 8, 2026






