அய்யனார் துணை குடும்பத்தை விட்டு பிரிகிறார்களா நிலா

அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியின் நம்பர் 1 சீரியலாக அய்யனார் துணை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் சென்ற வாரம், வீட்டிலுள்ள அனைவரின் சம்பளத்தில் இருந்து சேமித்த பணத்தை வைத்து புதிதாக டிவி வாங்கலாம் என முடிவு எடுத்தனர்.
ஆனால், அதற்கு நடேசனின் வண்டி EMI பிரச்சனை வந்துவிட்டது. கடன் கொடுத்தவர்கள் இரண்டு மாத தவணையை தரவில்லை என சண்டை போட்டதால், தங்களிடம் இருந்து ரூ. 35,000 பணத்தை அவர்களுக்கு தந்துவிட்டனர். இதனால் டிவி வாங்க முடியாமல் போனது.
ப்ரோமோ
இந்த நிலையில், வரும் வாரம் அய்யனார் துணை சீரியலில் நடக்கப்போகும் விஷயங்கள் குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில், நிலாவை பார்க்க அவருடைய தந்தை வீட்டிற்கு வருகிறார். அப்போது டிவி வாங்க முடியாமல் போன சூழல் குறித்து அவருக்கு தெரியவருகிறது.
இதன்பின், சோழனிடம் அவர் பேசுகிறார், “சென்னையில் ஒரு பிளாட் வாங்கி தருகிறேன், அங்கு எல்லா பொருட்களையும் வாங்கி போட்டுவிடுகிறேன். நீங்கள் அங்கு நிலாவை அழைத்துக்கொண்டு போய் சந்தோஷமாக வாழும் வழியை மட்டும் பாருங்க” என நிலாவின் தந்தை கூறுகிறார்.
இதை கேட்டு சோழன் தர்மசங்கடமடைகிறார். மேலும், திருப்பி ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனமாக இருக்கிறார். இவருடைய மௌனம் நிலாவை அழைத்துக்கொண்டு சென்னை போவதற்கு சம்மதமாக இருக்குமா என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.






