நிகழ்ச்சி முடிந்த கையோடு சக்தி எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பம்… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ…
எதிர்நீச்சல் தொடர்கிறது
குணசேகரன் கட்டு கட்டும் வேலையை செய்வார் அதனால் பிரச்சனைகள் ஏற்படுவது போல தான் கதைக்களம் சென்று வந்தது.
இதற்கு இடையில் விசாலாட்சி வீட்டிற்கு வர அவரிடம் தேவகி மகன் பற்றிய உண்மையை மருமகள்கள் கூற அவர் ஷாக் ஆகிறார். பிறகு குணசேகரனை விடுங்கள், அவன் தப்பிற்கு மேல் தப்பு செய்கிறான் நீங்கள் வாழ வேண்டியவர்கள் என கதிர் மற்றும் ஞானத்திடம் எமோஷ்னலாக சில விஷயங்கள் பேசுகிறார்.
அவர்களின் மனமும் மாற விசாலாட்சி சொன்னது போல் ஜனனியின் வளைகாப்பிற்கு ஒப்புக்கொள்கிறார்கள்.
புரொமோ
ஜனனி அம்மா-அப்பாவிற்கு பதிலாக அவரின் மாமா வர அவர் செம சந்தோஷமாகிறார். எல்லோரும் சூழ ஜனனியின் வளைகாப்பு சூப்பராக நடந்து முடிகிறது.
இன்றைய எபிசோட் புரொமோவில், சக்தி ஜனனியிடம் நாம் மெட்ராஸ் செல்வோம் என கூற முதலில் அவர் தயங்குகிறார். பின் இந்த விஷயத்தை சக்தி குடும்பத்தினரிடம் கூற விசாலாட்சி கேள்வி கேட்கிறார்.
சக்தி முடிவு எடுத்தது போல் வீட்டைவிட்டு கிளம்பும் போது ஒரு கார் என்ட்ரி ஆகிறது. அதில் இருப்பது யார், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதையெல்லாம் பொறுத்திருந்து காண்போம்.
