அயலி சீரியலில் புதியதாக என்ட்ரி கொடுத்துள்ள பிரபல நடிகை… யார் பாருங்க
அயலி சீரியல்
ஜீ தமிழ், தமிழ் சினிமாவில் கலக்கும் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று.
இந்த தொலைக்காட்சியில் ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகியது, அதில் ஒன்று தான் அயலி. ஆனந்த் செல்வன் மற்றும் தேஜஸ்வினி இருவரும் முதன்முறையாக ஜோடியாக நடிக்க இந்த தொடர் கடந்த வருடம் ஜுன் மாதம் தொங்கப்பட்டது.
அம்மாவை இழந்த அயலி, தனது சித்தியால் வேலைக்காரி போல் வீட்டில் நடத்தப்படுகிறார், அம்மாவின் வார்த்தைக்காக குடும்பத்தைப் பெரிதாக மதிக்கிறார். அதேசமயம் குடும்பத்திற்கு தெரியாமல் ரகசிய போலீசாகவும் இருக்கிறார்.
குடும்பம் அவரை புரிந்துகொள்கிறதா, அவரை பற்றிய உண்மை வெளிவருகிறதா, தனது அம்மா மீது விழுந்த பழியை அயலி போக்குகிறாரா என்பதை நோக்கிய கதை.
நியூ என்ட்ரி
தற்போது இந்த சீரியலில் புதிய என்ட்ரியாக சன் மற்றும் ஜீ தமிழ் சீரியல்களில் நடித்த நடிகை வருகிறார். அவர் வேறுயாரும் இல்லை நடிகை பிரியங்கா தான். இந்த விஷயம் அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறிவருகிறார்கள்.
