ரோஹினிக்கு அடுத்த செக் வைக்க விஜயா போட்ட பிளான்.. மனோஜை பிரிவாரா? சிறகடிக்க ஆசை புரொமோ

ரோஹினிக்கு அடுத்த செக் வைக்க விஜயா போட்ட பிளான்.. மனோஜை பிரிவாரா? சிறகடிக்க ஆசை புரொமோ


சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில், சிந்தாமணி வீட்டில் இருந்து மீனா பணத்தை எடுத்த விஷயத்தை முத்து, ஸ்ருதி, ரவி எல்லா கதையையும் குடும்பத்தினரிடம் கூறுகிறார்கள்.

எல்லோரும் சந்தோஷப்பட விஜயா மட்டும் இப்படி ஆகிவிட்டதே என சோகமாகிறார். அடுத்து ரவி மற்றும் ஸ்ருதிக்கு ஹோட்டலில் மீனாவால் நல்ல விஷயம் நடக்கிறது, அதை வீட்டில் வந்து கூறி சந்தோஷப்படுத்துகிறார்கள்.

மீனா தனக்கு வந்த பணத்தை சீதாவிடம் கொடுக்க அவரோ தனது காதலரிடம் பணத்தை திருப்பி கொடுத்துவிடுகிறார்.

ரோஹினிக்கு அடுத்த செக் வைக்க விஜயா போட்ட பிளான்.. மனோஜை பிரிவாரா? சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai Serial May 1 Promo

புரொமோ

எபிசோட் இந்த சீன்களுடன் முடிவடைய நாளைய எபிசோடின் புரொமோ வெளியானது.

அதில், விஜயா பார்வதி கேரளா சாமியார் பற்றி சொன்னியே அதாவது வசியம் செய்து எல்லோரையும் பிரிப்பவர். அவரை நான் பார்க்க வேண்டும், மனோஜ்-ரோஹினியை பிரிக்க வேண்டும் என்கிறார்.

அதைக்கேட்டு அங்கே வந்த ரோஹினி கடும் ஷாக் ஆகிறார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *