பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு நடந்த அதிர்ச்சி.. ரசிகர்களுக்கு வேண்டுகோள்

நடிகை ஸ்ரேயா கோஷல் இந்திய அளவில் பிரபலமான பாடகியாக இருந்து வருகிறார். அவரது குரலுக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.
தற்போது அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கும் பதிவு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
X கணக்கு ஹேக்
தனது X தள கணக்கை யாரோ பிப்ரவரி 13ம் தேதியில் இருந்து ஹேக் செய்துவிட்டார்கள் என ஸ்ரேயா கோஷல் தெரிவித்து இருக்கிறார். கணக்கை மீட்க முயற்சி மேற்கொண்டாலும் முடியவில்லை என அவர் கூறி இருக்கிறார்.
அதனால் தனது X பக்கத்தில் வரும் பதிவுகளை மற்றும் லின்க்-களை மற்றும் மெசேஜ்களை யாரும் நம்ப வேண்டாம் என அவர் எச்சரித்து இருக்கிறார்.






