Siddharth about his self respect
சித்தார்த்
தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக மணிரத்னம் அவர்களிடம் தன் சினிமா பயணத்தை தொடங்கியவர் சித்தார்த். அதை தொடர்ந்து ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவின் நாயகனாக அறிமுகமானார்.
பிறகு தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த இவர் சின்ன சறுக்கலை சந்தித்து மீண்டும் தமிழ் சினிமாவில் சித்தா மூலம் தன் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினார். இதன் பிறகு மிக கவனமாக தான், தன்னுடைய அடுத்தடுத்த படங்களை தேர்ந்தெடுத்து சித்தார்த் நடித்து வருகிறார்.
தற்போது அவர் அள்ளித்துள்ள பேட்டி ஒன்றில், பெண்களை காட்சி பொருளாக காட்டும் எந்த ஒரு படங்களிலோ அல்லது ஐட்டம் பாடல்களிலோ ஒரு போதும் நான் நடிக்க மாட்டேன், திரையுலக வெற்றிகாக என் சுயமரியாதையை ஒரு போதும் விட்டுகொடுக்க மாட்டேன் என சித்தார்த் கூறியுள்ளார்.
