திடீர் ஷாக் கொடுத்த நடேசன்.. அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்ற அய்யனார் துணை குடும்பம்..

அய்யனார் துணை
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் அய்யனார் துணை. இந்த சீரியலில் தற்போது வானதி – பாண்டியன் இடையே ஏற்பட்டுள்ள பிரிவு ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது.
பாண்டியன் இவ்வளவு சோகமாக இருப்பதை பார்த்துவிட்டு சோழனும் நிலாவும் வானதியிடம் பேசினார்கள். ஆனால், வானதி அவர்களிடம் திமிராக பேசிவிட்டு சென்றுவிட்டார். இதை அறிந்த பாண்டியன் சோழனிடம் சண்டை போட, பின் அங்கு வந்த நிலா பாண்டியனிடம் மன்னிப்பும் கேட்டார்.
ஷாக் கொடுத்த நடேசன்
இரவு இவ்வளவு ரகளை வீட்டில் நடந்த நிலையில், காலையில் எழுந்தவுடன் வீட்டில் உள்ள அனைவரையும் இங்கேயே இருக்கும்படியும், உங்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்றும் கூறுகிறார் நடேசன்.
அது என்ன சர்ப்ரைஸ் என்றால் நடேசன் புதிதாக டெம்போ வண்டியை வாங்கியுள்ளார். அதனை ஒட்டிக்கொண்டு வீட்டின்முன் வந்து அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்து அய்யனார் துணை குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்கிறார்கள்.






