விஜய்யை தொடர்ந்து இந்த டாப் நடிகரும் அரசியலில் களமிறங்குகிறாரா?… அதிகாரப்பூர்வ தகவல்

விஜய்யை தொடர்ந்து இந்த டாப் நடிகரும் அரசியலில் களமிறங்குகிறாரா?… அதிகாரப்பூர்வ தகவல்


நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக ராஜ்ஜியம் செய்தவர் தான் விஜய். 

அப்பா மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்து நடிக்க வந்தாலும் ஆரம்பத்தில் நிறைய மோசமான விமர்சனங்களை எதிர்க்கொண்டார். பின் கொஞ்சம் கொஞ்சமாக தனது கடின உழைப்பின் மூலம் வெற்றிப் படங்களை கொடுத்தார்.

ஆரம்பத்தில் நடிப்பிற்காகவும் லுக்கிற்காகவும் அவரை விமர்சனம் செய்தவர்களே இப்போது அவரைப் பற்றி புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நாயகனாக தன்னை நிரூபித்த விஜய், தன்னை டாப்பில் உட்கார வைத்த மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என அரசியலில் களமிறங்கி இப்போது பல மாற்றங்களை நிகழ்த்தி வருகிறார்.

விஜய்யின் அரசு நிறைய நல்ல விஷயங்கள் செய்து வருவதாக மக்கள் கூறி சந்தோஷப்பட்டு வருகின்றனர்.

விஜய்யை தொடர்ந்து இந்த டாப் நடிகரும் அரசியலில் களமிறங்குகிறாரா?... அதிகாரப்பூர்வ தகவல் | After Vijay Another Actor Entry In Politics

அடுத்த என்ட்ரி


சினிமா பிரபலங்கள் அரசியலில் களமிறங்குவது என்பது புதிய விஷயம் இல்லை. தமிழ்நாடு மட்டுமில்லை எந்த மாநிலம் எடுத்தாலும் சினிமாவில் இருந்து அரசியலில் களமிறங்கியவர்கள் உள்ளனர்.

இப்போது விஜய்யை தொடர்ந்து சினிமாவில் டாப் நாயகராக இருக்கும் சூர்யா அரசியலில் அடுத்து என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்பட்டது.

விஜய்யை தொடர்ந்து இந்த டாப் நடிகரும் அரசியலில் களமிறங்குகிறாரா?... அதிகாரப்பூர்வ தகவல் | After Vijay Another Actor Entry In Politics

அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சூர்யா மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது என நடிகரின் அரசியல் என்ட்ரி குறித்து பேசினார்.

இந்த விஷயம் பரபரப்பாக சூர்யா தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் எனக்குக் கட்சி அரசியல் வேண்டாம், ஆனால் எனது சமூக சேவைப் பணிகள் தொடரும் என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *