ஸ்ருதி அம்மா செய்த காரியம், கதறி கதறி அழும் விஜயா, சோகமான சம்பவம்… சிறகடிக்க ஆசை சீரியல்

சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை.
அண்ணாமலை கையெழுத்தை மனோஜ் போட்டதால் வீட்டிப் பத்திரத்தை கையில் வைத்துக்கொண்டு முத்து குடும்பத்திற்கு ஆட்டம் காட்டி வருகிறார்கள் பைனான்சியர் மற்றும் சிந்தாமணி.
முத்து-மீனா அண்ணாமலையுடன் மீனா அம்மா வீட்டில் வசிக்க, ஸ்ருதி அம்மா வீட்டிற்கு விஜயா சென்றுவிட்டார்.
எபிசோட்
மீனா வீட்டில் அண்ணாமலையை தக்க மரியாதையுடன் அவரை நடத்த ஸ்ருதி வீட்டில் விஜயாவிற்கு சோகம் நடந்து வருகிறது.
ஒரு காபியோ, சாப்பாடோ எதுவும் சரியில்லை. இதையெல்லாம் தாண்டி விஜயா வீட்டில் இருக்க எல்லா அறையும் பூட்டிக்கொண்டு ஸ்ருதி அம்மா அப்பா வெளியே செல்கிறார்கள்.
அந்த விஷயம் விஜயாவிற்கு கோபத்தை கொடுக்க பார்வதிக்கு போன் செய்து இதை கூறுகிறார், உன் வீட்டிற்கு நான் வருகிறேன் என்கிறார். ஆனால் பார்வதி, உன் கணவருடன் என் வீட்டிற்கு வந்தால் வா இல்லையெனில் அவர் இருக்கும் இடத்திற்கு செல் அதுதான் உனக்கு மரியாதை என்கிறார்.
பின் அடுத்த வார எபிசோடின் புரொமோவில், ஸ்ருதி அம்மா வீட்டிற்கு நண்பர்கள் சிலர் வருகிறார்கள், அவர்கள் மது வேறு அருந்துகிறார்கள். அப்போது ஒருவர் பாடல் பாட விஜயாவை நடனம் ஆட கூறி ஸ்ருதி அம்மா வற்புறுத்துகிறார்.
இதனால் விஜயா மிகுந்த வேதனை அடைகிறார், பின் தனது அறைக்கு சென்று கதறி கதறி அழுகிறார்.






