பிரபல மலையாள சினிமா நடிகர் சந்தோஷ் விபத்தில் உயிரிழப்பு…

சந்தோஷ்
பிரபல மலையாள சினிமா நடிகர் விபத்தில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1982ம் ஆண்டு பி.ஜி. விஸ்வம்பரன் இயக்கிய இது நங்களுடே கதா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் சந்தோஷ் கேசவன் நாயர்.
வில்லன், கதாநாயகன், நகைச்சுசை நடிகர் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் இன்று காலை மனைவியுடன் காரில் சென்றபோது எதிர்ப்பாரா விதமாக ஒரு வேன் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
சந்தோஷ் கேசவன் நாயர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரத மனைவி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் மலையாள சினிமா திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






