பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா

பாண்டியன் ஸ்டோர்ஸ்
கடந்த 2018ஆம் ஆண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் சீசன் தொடங்கியது. வெற்றிகரமாக 6 வருடங்களை கடந்த இந்த சீரியல் 2023ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதன்பின் அதே 2023ஆம் ஆண்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடங்கியது.
இந்த சீரியலில் ஸ்டாலின், நிரோஷா, விஜே கதிர், ஷாலினி, சரண்யா துரடி, வெங்கட் என பலரும் நடித்து வருகிறார்கள். இதில் விஜே கதிர் சரவணன் என்கிற கதாபாத்திரத்திலும், நடிகை சரண்யா துரடி தங்கமயில் என்கிற கதாபாத்திரத்திலும் கணவன் மனைவியாக நடித்து வருகின்றனர்.
கதிர் – சரண்யா சம்பளம்
தங்கமயில் பொய் சொல்லி திருமணம் செய்துகொண்டதால், தற்போது அவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கதிர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்த நிலையில், கதிர் மற்றும் சரண்யா துரடி இருவரும் இந்த சீரியலில் நடிக்க வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு நடிகை சரண்யா துரடி ரூ. 10,000 முதல் ரூ. 12,000 வரையும், நடிகர் கதிர் ரூ. 7,000 சம்பளமாக பெறுகிறார்கள் என கூறப்படுகிறது.






