நன்றி மறவாத தனுஷ்.. நடிகர் ராஜ்கிரண் குறித்து மேடையில் உருக்கம்!

நன்றி மறவாத தனுஷ்.. நடிகர் ராஜ்கிரண் குறித்து மேடையில் உருக்கம்!


தனுஷ்

நடிகர் மற்றும் இயக்குநராக சமீபகாலமாக மிகவும் பிஸியாக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவர் இயக்கத்தில் பா. பாண்டி வெளிவந்ததை தொடர்ந்து அதன்பின் நீண்ட இடைவேளைக்கு பின் ராயன் வெளியானது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை தனுஷ் இயக்கியிருந்தார். தற்போது தனுஷின் இயக்கத்தில் நான்காவதாக உருவாகியுள்ள படம் இட்லி கடை.

இப்படத்தில் ஹீரோவாகவும் தனுஷ் நடித்துள்ளார். மேலும், இவருடன் நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய், ஷாலினி பாண்டே, பார்த்திபன், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் என பலர் நடித்துள்ளனர்.

நன்றி மறவாத தனுஷ்.. நடிகர் ராஜ்கிரண் குறித்து மேடையில் உருக்கம்! | Dhanush Thanks To Top Actor On Stage

மேடையில் உருக்கம்! 

இன்று இப்படம் வெளியாகி உள்ள நிலையில், மேடையில் தனுஷ் ராஜ்கிரண் குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” ராஜ்கிரண் சாருக்கு என் குடும்பமே கடமைப்பட்டுள்ளது. என் குடும்பத்திற்கு நன்றி மறக்காத வியாதி இருக்கு. நீங்கள் என் குடும்பத்திற்கு சாமி மாதிரி.

எங்க அப்பாவுக்கு முதல் பட ஹீரோ நீங்க தான். அது போன்று என் முதல் படத்தின் ஹீரோவும் நீங்க தான். என் படத்தில் நீங்கள் இருப்பது ஆசிர்வாதம், மிகவும் நன்றி சார்” என்று தெரிவித்துள்ளார். 

நன்றி மறவாத தனுஷ்.. நடிகர் ராஜ்கிரண் குறித்து மேடையில் உருக்கம்! | Dhanush Thanks To Top Actor On Stage


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *