திருமணமானவர்களிடம் முக்கிய வேண்டுகோள் வைக்கும் மிர்ச்சி செந்தில்… என்ன தெரியுமா?

மிர்ச்சி செந்தில்
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒரு சினிமா பிரபலம் தான் மிர்ச்சி செந்தில். வானொலியில் பணியாற்றி மக்களின் மனதை வென்றவர் அப்படியே சின்னத்திரை பக்கம் வந்தார்.
முதன்முறையாக ஹீரோவாக சரவணன் மீனாட்சி என்ற தொடர் நடித்தார், அவருக்கு அந்த சீரியல் பெரிய அளவில் வளர்ச்சியை கொடுத்தது என்று தான் கூற வேண்டும். அந்த சீரியலில் நடித்த ஸ்ரீஜாவும், இவரும் காதலிக்க திருமணமும் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் கழித்து ஒரு குழந்தை பிறந்தது.
வேண்டுகோள்
கடைசியாக மிர்ச்சி செந்தில் ஜீ தமிழில் அண்ணா சீரியலில் நடித்திருந்தார். அந்த தொடரும் சில மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் மிர்ச்சி செந்தில் ஒரு பேட்டியில் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில் அவர், திருமணம் ஆகி 10 ஆண்டுகள் கழித்து தான் எங்களுக்கு குழந்தை பிறந்தது.
அந்த 10 வருஷத்தில் எங்களுக்குள்ள நிறைய பிரச்சனை வந்தது. இப்போது இருக்க நிறைய பேர் செட்டில் ஆகிட்டு குழந்தை பெத்துக்கலாம்னு நினைக்குறாங்க, தயவு செய்து அந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க. எவ்ளோ சீக்கிரம் பெத்துக்க முடியுமோ பெத்துக்கோங்க.
சைகலாஜிக்கா ஒரு குழந்தை வந்தா கணவன் மனைவிக்கு இடையே ஒரு பாண்டிங் வரும் என கூறியுள்ளார்.






