ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்… எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் எந்த ஒரு சீரியலிலும் கல்யாணம் என்பது சாதாரணமாக நடக்காது. எப்போது பாரு பிரச்சனை, திருமண தடங்கல், குடும்ப பிரச்சனை என இப்படியே தான் எல்லா கதையும் அமையும்.
அப்படி குடும்பத்தில் பிரச்சனை என இல்லாமல் பிரச்சனையே குடும்பமாக இருக்கும் ஒரு சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
2ம் பாகம் தொடங்கியது முதல் பெண்கள் போராட்டம் தீர்ந்து நல்ல எதிர்க்காலம் காட்டுவது போல் கதைக்களம் அமையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் கதை முதல் பாகம் போல் பெண்களுக்கு போராட்டமாகவே உள்ளது.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், பார்கவி-தர்ஷன் திருமணம் நடக்க இருக்கிறது. திருமணத்திற்கு சக்தி, ஜனனியுடன் வீட்டிற்கு வருகிறார், அவரைப் பார்த்ததும் கதிர் எதற்கு வீட்டிற்கு வருகிறீர்கள், வெட்கமா இல்லையா, வெளியே போ என்கிறார்.
பின் பார்கவி திருமணம் நடக்கும் நேரத்தில் ஏதோ கூற எத வந்து எப்போ பேசுற என கேட்கிறார், அதற்கு பார்கவி, இப்போது பேசவில்லை என்றால் என்னால் எப்போதும் பேச முடியாது.
இவர்களை போல என்னால் வாழ்க்கை முழுவதும் முடங்கி கிடக்க முடியாது என கூற ஈஸ்வரி ஷாக் ஆகிறார்.






