ஆதி பிளாக் மெயில் செய்ததால் தற்கொலை செய்துகொண்டு இறந்த இலங்கை பெண்… தாமரைச்செல்வி ஷாக்கிங் நியூஸ்

தாமரைச் செல்வி
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பரீட்சயமான முகமாக மாறியவர் தான் தாமரைச் செல்வி.
கிராமத்தில் இருந்து வந்தவர் இப்போது சினிமாவில் கிடைக்கும் வாய்ப்புகளில் பணியாற்றி வளர்ந்து வருகிறார். கடைசியாக விஜய்யில் ஒளிபரப்பான சின்ன மருமகள் சீரியலில் நடித்திருந்தார், தற்போது அந்த சீரியலில் ஏற்பட்ட பழக்கத்தால் இப்போது பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.
பேட்டி
சின்ன மருமகள் சீரியலில் நாயகியாக நடிக்கும் ஸ்வேதாவின் கணவர் ஆதி பற்றிய செய்திகள் தான் இப்போது சின்னத்திரையில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஆதி, தாமரைச் செல்வியிடம் நகை வாங்கி ஏமாற்றியுள்ளார், அவர் வீடியோவாக வெளியிட தொடர்ந்து பலரும் ஆதி என்னையும் ஏமாற்றிவிட்டார் என பலரும் புகார் அளித்து வருகிறார்கள். இதற்கு இடையில் நடிகை ஸ்வேதாவும் ஆதியை நம்பி ஏமாந்துவிட்டேன், அவரை நான் பிரிந்துவிட்டேன் என கூறுகிறார்.
அண்மையில் ஒரு பேட்டியில் தாமரைச் செல்வி பேசும்போது, ஆதியால் நான் மட்டும் இல்லை பலர் ஏமாந்துள்ளார்கள். குறிப்பாக இலங்கையை சேர்ந்த ஒரு பெண்ணை ஆதி பிளாக்மெயில் செய்ய அந்த பெண் இப்போது உயிருடனே இல்லை.
அந்த பெண்ணுடன் ஆதி வீடியோ காலில் நெருக்கமாக பேசி இருக்கிறார், அதை அப்படியே ரெக்கார்ட் போட்டு வைத்துக்கொண்டு அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியும் உள்ளார்.
தொடர்ந்து பணம் கொடுக்க முடியாத நிலையில் அந்த பெண் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக அவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.






