அஜித்தை வைத்து படம் எடுக்க ஆள் இல்லைங்க, வெளுத்து வாங்கிய திருப்பூர் சுப்ரமணியம்

அஜித்
அஜித் இன்று இந்திய சினிமாவின் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் எப்போதும் தனக்கென ஒரு கொள்கை வைத்து அதில் மட்டுமே வாழ்ந்து வருபவர்.
ஆனால் சமீப காலமாக இவருடைய கொள்கைகள் எல்லாம் சுக்கு நூறாக உடைந்துவிட்டன. ஆம், எப்போது அஜித் கார் ரேஸ் போனாரோ அப்போதே விளம்பரம், பேட்டி என கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.
திருப்பூர் சுப்ரமணியம்
இந்நிலையில் அஜித் தற்போது சொந்த தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து அதில் தான் டேர் டெவில் படத்தை எடுக்கவுள்ளார்.
இதுகுறித்து திருப்பூர் சுப்ரமணியம் “அஜித் மிகப்பெரிய உச்ச நடிகர் தான், அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை, ஆனால் அதே நேரத்தில் தான் கேட்கிற சம்பளத்தில் உறுதியாக இருந்ததால் தான் இன்று அவரை வைத்து படம் எடுக்க ஆள் இல்லாமல், அவரே படம் தயாரிக்க வந்துவிட்டார், படத்திற்காக ப்ரோமோஷன் வரமாட்டார், ஆனால், கார் ரேஸுக்கு மட்டும் ப்ரோமோஷன் வருவாரா?” என திருப்பூர் சுப்ரமணியம் கோபமாக சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.






