துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ

சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் நிலையில், குழந்தையை அன்புவின் அம்மாவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஆனந்தி ஆசைப்படுகிறார்.
மறுபுறம் அந்த குழந்தையை தத்தெடுக்க வேண்டும் என மகேஷ் ஆசைப்படுகிறார். அதற்கு அவரது அப்பா கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
அது நடக்குமா இல்லையா என்பது ஒருபக்கம் இருந்தாலும், வில்லி துளசி குழந்தையை அழிக்க மோசமான செயலை செய்கிறார். அது இந்த வார ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
கதறி துடித்த ஆனந்தி
ஆனந்திக்காக நாட்டு மருந்துகளை வாங்கி வந்து வைத்து இருக்கிறார் அன்பு. அதில் வில்லி துளசி வேறு எதையோ கலந்துகொடுத்து விடுகிறார்.
அதனால் சற்று நேரத்தில் ஆனந்தி கதறி துடிக்கிறார். அவரை அன்பு மற்றும் அவரது அம்மா மருத்துவமனைக்கு தூக்கி செல்கின்றனர். குழந்தைக்கு என்னவாகும்?
ப்ரோமோ இதோ..






