ஜனனி இறந்துவிட்டாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது அதிர்ச்சி ப்ரோமோ

மிகவும் பரபரப்பான கதைக்களத்துடன் சென்றுகொண்டிருக்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல். சன் டிவியில் இந்த தொடருக்கு மிக அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இன்றைய எபிசோடின் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
ஜனனி இறந்துவிட்டாரா?
லீஸ் தொகை எவ்வளவு கேட்கிறார்கள் என கதிர் கேட்க, பேசிய தொகையை விட 10 லட்சம் அதிகம் கேட்கிறார்கள் என ராவணன் சொல்கிறார். அதை கேட்டு கதிர் அதிர்ச்சி அடைகிறார்.
அதன் பின் ஜனனி சக்தி உடன் போனில் பேசி ‘இங்கே நிறைய நடந்துவிட்டது’ என அனைத்தையும் விவரிக்கிறார்.
மேலும் ராவணனுக்கு ஜனனி இறந்துவிட்டதாக போன் வருகிறது. அதை கேட்டு அவர் மகிழ்ச்சியில் குஷியாகிறார். ப்ரோமோவை பாருங்க.






