எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்…. என்ன தெரியுமா?

எதிர்நீச்சல் தொடர்கிறது
எத்தனை பிரச்சனை வந்தாலும் ஒரு பெண் எதிர்நீச்சல் போட்டு மேலே வந்து சாதிப்பாள் என்பதை காட்டு வகையில் சன் டிவியில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.
முதல் பாகத்தில் தான் பெண்கள் தங்களது வாழ்க்கையில் சாதிக்க முடியாமல் அடிமை வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்று பார்த்தால் 2வது பாகத்திலும் அப்படியே அது தொடர்கிறது. எல்லா தவறுகளையும் செய்த குணசேகரன் இப்போதும் தண்டனை அனுபவிக்காமல் நல்லவன் போலவே தன்னை காட்டிக்கொண்டு வருகிறார்.
இதுநாள் வரை தம்பிகள் தான் அவர் சொல்வதை கேட்டு நடந்தார்கள், இப்போது ஈஸ்வரியும் அவர்களது லிஸ்டில் இணைந்துவிட்டார்.
குட் நியூஸ்
இன்றைய எபிசோடில், தர்ஷன்-பார்கவி திருமண விசேஷம் தொடங்கிவிட்டது. வீட்டில் எல்லோரும் புதிய உடை அணிந்து திருமணத்திற்கு தயாராக வீட்டிற்கு ஜனனி மற்றும் சக்தி வருகிறார்கள்.
இந்த நேரத்தில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் சன் டிவியே வெளியிட்டுள்ளது. அதாவது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் 500 எபிசோடுகளை எட்டிவிட்டதாம்.
சன் டிவியே தங்களது இன்ஸ்டாவில் பதிவு போட ரசிகர்கள் சீரியல் குழுவிற்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.






