முத்துவேலுக்காக பாண்டியன் சொன்ன விஷயம், அழகான தருணம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் பரபரப்பான கதைக்களம் ஒளிபரப்பாகிறது.
அதாவது கதிர் முத்துவேலை கடத்திவிட்டார் என சக்திவேல் பெரிய பிரச்சனையை கிளப்பிவிட்டார். கோமதி, மீனா, ராஜி வீட்டிற்கு கதிரும் முத்துவேலுடன் வருகிறார்.
கதிரை பார்த்ததும் சக்திவேல் வழக்கம் போல் பெரிய பிரச்சனை செய்கிறார். அந்த நேரத்தில் சுரேஷ் பாண்டியனை தனியாக அழைத்துச்சென்று முத்துவேலுக்கு இருக்கும் உடல்நலக் குறைவு பற்றி கூறுகிறார்.
இதைக்கேட்டதும் ஷாக் ஆன பாண்டியன் யாரிடமும் உண்மையை கூறாமல் மாமனார்-மருமகன் வெளியே சென்றுள்ளார்கள், இதில் என்ன பிரச்சனை உள்ளது. வேண்டுமென்றால் உன் அண்ணனை உள்ளே அழைத்துச் சென்று என்ன விஷயம் என கேள், என் மகனிடம் எகிறிட்டு வந்தால் அவ்வளவு தான் என்கிறார்.
புரொமோ
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில், கோமதி மற்றும் ராஜி, முத்தவேலை சந்திக்க அவரது வீட்டிற்கு செல்கிறார்கள். அப்போது முத்துவேல் கோமதியிடம், கதிர் ரொம்ப நல்ல பையன், அவனை நன்றாக வளர்த்திருக்கிற என சந்தோஷமாக கூறுகிறார்.
பின் ராஜியுடன் வெளியில் வாக்கிங் செல்கிறார் முத்துவேல். அப்போது அவரை பார்த்த பாண்டியன், ராஜியை உள்ளே அனுப்பிவிட்டு எனக்கு எல்லா விஷயமும் தெரியும் என்கிறார். உங்களுக்கு ஒன்றும் ஆகாது சரியாகிவிடுவீரகள். இனி எங்கேயாவது வெளியே செல்ல வேண்டும் என்றால் கதிரை அழைத்துச் செல்லுங்கள், அல்லது என்னை கூப்பிடுங்கள் என்கிறார்.






