நடிகையின் வீட்டில் இறந்து கிடைத்த தொழிலதிபர்! அதிர்ச்சி சம்பவம்

பிரபல நடிகை கிரிஷி தபண்டா என்பவரது வீட்டில் தொழிலதிபர் ஒருவர் இறந்து கிடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூரில் ராஜராஜேஸ்வரி நகரில் இருக்கும் கன்னட நடிகை கிரிஷி தபண்டா வீட்டில் தான் இது நடந்து இருக்கிறது.
நேற்று இரவு 8.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. கடந்த ஒரு வாரமாக அந்த நபர் நடிகையை வீட்டில் தான் தங்கி இருந்தாராம்.
தற்கொலை
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தனது மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு தனிமையில் இருந்திருக்கிறார் வைசாக் என்ற அந்த நபர். மன அழுத்தத்திற்கும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒரு வாரமாக நடிகை கிரிஷி தபண்டா வீட்டில் தங்கி இருந்தாராம்.
நேற்று இரவு அவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இருக்கின்றனர். மேலும் அங்கு எந்த கடிதமும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.






