திறப்பு விழாவில் ஏற்பட்ட பிரச்சனை, ஆபத்தில் ஜனனி… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
அண்ணன் பின்னாலேயே இத்தனை நாள் ஊதாரியாக, ரவுடியாக சுற்றிவந்த கதிர் இப்போது ராவணன் கொடுத்த ஐடியாவால் சொந்த தொழில் துவங்கியுள்ளார்.
டபுப் Document உள்ள ஒரு இடத்தை ராவணன் வேண்டும் என்றே குணசேகரனுக்கு காட்ட எப்படியோ இடத்தை வாங்கிவிட்டார்கள், அதில் நந்தினி பெயரில் தொழிலையும் துவங்கிவிட்டார்.
கதிர்-நந்தினி மனமகிழ் மன்றத்தின் திறப்பு விழாவிற்காக குடும்பத்துடன் வருகிறார்கள், ஆனால் ஜனனி வரவில்லை.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், திறப்பு விழாவில் Furniture வரவில்லை என தெரிகிறது. நந்தினி ஒன்று Furniture வர வேண்டும் இல்லையென்றால் அதற்கான பணம் வர வேண்டும் என கோபமாக கூறுகிறார், நிலத்தை விற்றவர் அது எப்படி என மழுப்புகிறார்.
இங்கு வீட்டில் ஜனனி யாரும் இல்லாமல் தனியாக இருக்கிறார். அப்போது ஜனனி எதர்சையாக வெளியே பார்க்கும் போது இருவர் வீட்டையே பார்க்கிறார்கள், அதைப்பார்த்து ஜனனி பதறுகிறார்.
மனமகிழ் திறப்பு விழாவில் நந்தினி-ரேணுகா ஏதோ பேச அங்கு வந்த ரேணுகா அம்மா இருவருக்கும் மனக் கசப்பு ஏற்படும் வகையில் பேசுகிறார். இதோ புரொமோ,






