ஜீ தமிழின் வீரா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை… யாரு பாருங்க

வீரா சீரியல்
ஜீ தமிழில் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட சீரியல் தான் வீரா.
மாறன் என்பவரால் வீரா மற்றும் கண்மணி என்பவர்கள் தங்களது அண்ணனை விபத்தில் இழக்கிறார்கள். ஆனால் கடைசியில் மாறனுக்கும் வீராவிற்கு திருமணம் நடக்கிறது. அதன்பிறகு இவர்களது வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை வைத்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது வீரா சீரியல்.
இதில் முக்கிய ஜோடியாக நடிக்கும் வைஷ்ணவி மற்றும் அருணிற்கு பெரிய ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. ஜீ தமிழ் விருது விழாவில் கூட இந்த ஜோடிக்கு விருது எல்லாம் கிடைத்துள்ளது.
நியூ என்ட்ரி
கடந்த சில மாதங்களுக்கு முன் வீரா சீரியலின் முதல் பாகம் முடிவுக்கு வந்து 2ம் பாகம் தொடங்கப்பட்டது. சில புது முகங்களுடன் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியலில் இப்போது பிரபல நடிகை என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.
அவர் வேறுயாரும் இல்லை நாம் ஏற்கெனவே பார்த்து பழகிய நடிகை ஆனந்தி தான் வீரா சீரியலில் ராணி கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கிறாராம்.






