குணசேகரனுக்கு ஜனனி கொடுத்த எச்சரிக்கை, ராவனணுடன் நேராக மோதும் சக்தி… எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, ராவணன் யார் என்ற உண்மை குணசேகரன் குடும்பத்திற்கு தெரியவில்லை.
இப்போதைக்கு ஜனனிக்கு மட்டும் உண்மை தெரிந்தது, அடுத்து என்ன நடக்குமோ தெரியவில்லை.
Vkவை சக்தியிடம் இருந்து கடத்திய ராவணன் அவரை கொலை செய்ய பார்த்தார், ஆனால் அவரைப்பற்றிய உண்மை சக்தியிடம் இருக்கிறது என கூற உடனே ராவணனின் அடுத்த டார்க்கெட் சக்தி மீது விழுந்துள்ளது.
தர்ஷினி ஒருவழியாக தன்னை காப்பாற்றியது யார் என்ற உண்மையை ஈஸ்வரியிடம் கூறி பிரச்சனையை முடித்துள்ளார்.
புரொமோ
தற்போது இன்றைய எபிசோட் புரொமோவில், வீட்டிற்கு வந்த ஜனனியை பெண்கள் நலம் விசாரிக்கிறார்கள். பின் குணசேகரன் நீ எங்கே சென்றாய், என்ன செய்தாய் என்பது எனக்கு தெரியும் என கூற ஜனனி நான் எங்கேயும் செல்லவில்லை என்கிறார்.
அடுத்து ராவணன் பற்றிய உண்மையை அறிந்த ஜனனி குணசேகரனுக்கு வீட்டில் பெரிய பிரச்சனை வரப்போகிறது என்று எச்சரிக்கை விடுக்கிறார்.
இன்னொரு பக்கம் ராவணன் பற்றிய உண்மையை அறிந்த சக்தி நேரடியாக அவருடன் மோத களமிறங்குகிறார்.
