25 வருடங்களுக்கு பிறகு அக்சய் குமாருடன் இணைந்த தபு

25 வருடங்களுக்கு பிறகு அக்சய் குமாருடன் இணைந்த தபு


சென்னை,

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அக்சய் குமார். இவர், தமிழில் ரஜினியுடன் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவரின் நடிப்பில் ஓஎம்ஜி -2, ‘சர்பிரா’, ‘கேல் கேல் மெய்ன்’ மற்றும் சிங்கம் அகெய்ன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.

மேலும், பாலிவுட் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கும் ‘பூத் பங்களா’ படத்திலும் அக்சய் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். கடைசியாக இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பூல் பூலையா படத்தில் ஒன்றாக பணியாற்றினர். இதன் மூலம் அக்சய் குமார் 16 வருடங்களுக்கு பிறகு பிரியதர்ஷனுடன் இணைந்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகை தபு இணைந்திருக்கிறார். இதற்கு முன்பு கடந்த 2000-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘ஹேரா பெரி’ படத்தில் அக்சய் குமாருடன் தபு நடித்திருந்தார். தற்போது 25 வருடங்களுக்கு பிறகு இவர்களுடன் தபு இணைந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி வெளியாக உள்ளது.



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *