இந்த படத்தை கண்டிப்பாக பாருங்க, நல்ல படத்தை என்கிரேஜ் பண்ணனும்- நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு
சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் படம் எப்போது வரும் என பலரும் காத்திருப்பார்கள்.
இந்த நிலையில் சிம்பு சோலோ ஹீரோவாக கடைசியாக நடித்த படம் அச்சம் என்பது மடமையடா தான்.
எப்போதும் சிம்பு சோலோ ஹீரோவாக நடிப்பார் என காத்திருந்த நிலையில் அரசன் படம் படு ஜோராக படப்பிடிப்பு நடந்து வருகிறது, இந்த படம் விரைவில் திரைக்கு வரும்படி வேகவேகமாக வேலைகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் சிம்பு சமீபத்தில் மொத ராத்திரி படத்தை பார்த்துவிட்டு, கண்டிப்பாக இந்த படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும், நல்ல படத்தை கண்டிப்பாக என்கிரேஜ் செய்ய வேண்டும் என சிம்பு கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து பலரும் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
