விக்ரம் வீடியோவால் வந்த சர்ச்சை.. அரிய வகை குரங்கு பறிமுதல், ஓனர் தலைமறைவு

விக்ரம் சமீபத்தில் ஒரு அரிய வகை குரங்கு உடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அது வைரல் ஆக பெரிய சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.
அவரது சம்மந்தி வீட்டுக்கு சென்றபோது எடுத்த வீடியோ தான் அது என சொல்லப்பட்டது. அது பற்றி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
லார் கிப்பன் வகை குரங்கை வீட்டில் வளர்க்க அனுமதி பெறப்பட்டதா, சட்டப்படி வெளிநாட்டில் இருந்து அது கொண்டுவரப்பட்டதா என விசாரணை நடத்தப்பட்டது.
பறிமுதல்
ஈரோடு பெருந்துறையை சேர்ந்த கேசவநாதன் என்பவருக்கு சொந்தமான அந்த குரங்கு பற்றிய ஆவணங்களை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பபட்டு இருக்கிறது.
அவரிடம் மேலும் பல அரிய வகை விலங்குகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் உரிமையாளர் தற்போது தலைமறைவாகிவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.






