இதற்காக தான் காத்திருந்தேன்.. உருக்கமாக பேசிய சமந்தா

நடிகை சமந்தாவின் மா இன்டி பங்காரம் படம் சமீபத்தில் மிகப்பெரிய வசூலை குவித்து இருந்தது. சமந்தா ஹீரோயின் ஆக நடித்த படம் 100 கோடி வசூலித்தது, லோகா படத்திற்கு பிறகு பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க சமந்தா தற்போது கர்ப்பமாக இருப்பதால் அடுத்து மீண்டும் சினிமாவில் இருந்து ஒரு பிரேக் எடுக்க போகிறார்.
இதற்காக காத்திருந்தேன்
இந்நிலையில் சமந்தா அளித்த லேட்டஸ்ட் பேட்டியில் தான் தாய்மையை அடைய ஆவலுடன் காத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
“நான் அம்மா ஆக எப்போதும் விரும்பினேன். நான் எல்லாவற்றிலும் வாழ்க்கையில் passion உடன் தான் இருந்தேன். தற்போது ஒரு புது வித வலிமை மற்றும் நோக்கம் என்னிடம் உணருகிறேன். இந்த பயணத்திற்காக நான் காத்திருக்கிறேன்.”
இவ்வாறு சமந்தா கூறி இருக்கிறார்.






