மீண்டும் மீனாவிடம் தோற்றப்போய் நின்ற சிந்தாமணி, சிக்கலில் மனோஜ்… சிறகடிக்க ஆசை சீரியல்

சிறகடிக்க ஆசை
ஒரு குடும்பம், அதில் இருப்பவர்களாலேயே பல பிரச்சனைகள் என்ற கதையோடு சிறகடிக்க ஆசை சீரியல் ஒளிபரப்பாகிறது. மனோஜ் மூத்த மகனாக இருப்பவர், ஆனால் இவர் செய்யும் காரியங்கள் அனைத்தும் தவறான பாதைகள் தான்.
இப்போது கூட வீட்டிற்கு தெரியாமல் ஒரு விஷயம் செய்துள்ளார், அது எப்போது பெரியதாக வெடிக்கும் என தெரியவில்லை. மனோஜ் ரூ. 5 லட்சம் பணம் ரெடி செய்து ரோஹினியை விவாகரத்து செய்வார் என விஜயா நம்பிக்கொண்டு இருக்கிறார்.
ஆனால் மனோஜ் கனகாவை திருமணம் செய்தால் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என கல்யாணமும் செய்துவிட்டார்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், கனகா மனோஜை தேடி ஷோரூமிற்கு வருகிறார். வந்தவர் மனோஜை Husband Husband என கூப்பிட்டு பேசிக்கொண்டு இருக்கிறார், அந்த நேரம் ரோஹினி வருகிறார்.
மனோஜை தனியாக அழைத்து எப்போது பணம் தருவாய், அப்படி தந்தால் அதை வாங்கிக்கொண்டு நான் எங்கேயாவது சென்றுவிடுவேன், உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிவிட்டு செல்கிறார்.
பின் கனகா அம்மா வீட்டிற்கு அழைக்க மனோஜ் அங்கு செல்கிறார். அவரிடம் அறையில் முதல் இரவிற்கான ஏற்பாடுகளை காட்ட மனோஜ் ஷாக் ஆகி வெளியே வருகிறார். கனகா அம்மாவிடம் முதலில் பணம் தாருங்கள் பிறகு இதெல்லாம் வைத்துக்கொள்ளலாம் என கோபமாக கூறுகிறார்.
நாளைய எபிசோடின் புரொமோவில், சிந்தாமணி தேடி ஆர்டர் கொடுக்க ஒருவர் வருகிறார் அவர் ஆங்கிலத்தில் பேச சிந்தாமணி முழிக்கிறார். உங்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை, நான் சொல்வது புரியவில்லை என கிளம்ப அந்த நேரம் மீனா அவரை அழைத்து பேசுகிறார்.
அவரிடம் ஆங்கிலத்தில் சரளமாக பேச மீனாவிற்கு ஆர்டரும் கிடைக்கிறது, அதை அவர் கொண்டாட சிந்தாமணி செம கோபம் அடைகிறார்.






