‘சிம்பு சார் படம், விதியின் கையில் விட்டுவிட்டேன்’.. நடிகை கயாடு லோஹர் ஓபன் டாக்

‘சிம்பு சார் படம், விதியின் கையில் விட்டுவிட்டேன்’.. நடிகை கயாடு லோஹர் ஓபன் டாக்


கயாடு லோஹர்

கயாடு லோஹர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் இதயம் முரளி. ஜூலை 10-ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தென்னிந்திய அளவில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் கயாடு லோஹர். அவர் கைவசம் இம்மோர்ட்டால், I’m Game, The Paradise, மஞ்சணத்தி, சூர்யா 48 என பல திரைப்படங்கள் உள்ளன. இதில், சிம்புவின் திரைப்படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை, அந்தப் படம் கைவிடப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

ஓபன் டாக்


இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சிம்புவுடனான தான் நடிக்க வேண்டிய திரைப்படம் குறித்து நடிகை கயாடு லோஹர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

“சிம்பு சாருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் போதெல்லாம், ஏதோ ஒரு காரணத்தால் அந்த படம் கைவிடப்பட்டுவிடுகிறது. அதனால், அவருடன் நான் இறுதியாக இணையும் படம் நிச்சயமாக மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும் என நம்புகிறேன். அதை விதியின் கையில் விட்டுவிட்டேன்” என கூறியுள்ளார். கயாடு லோஹர் விரைவில் சிம்புவுடன் இணைந்து நடிப்பார் என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *