போலீஸ் ஸ்டேஷனுக்கு போன மதி.. ஆடிப்போன சுரேஷ்! அழகே அழகு அடுத்த வார ப்ரோமோ

விஜய் டிவியின் அழகே அழகு சீரியலில் மாமியார் – மருமகள் சண்டை பெரிதாகி மதி வீட்டை விட்டே வெளியில் அனுப்பப்படுகிறார். அவரை அவரது குடும்பத்தினரும் அழைத்து சென்றுவிடுகின்றனர்.
அதன் பின் மதிக்கு போன் செய்து மிரட்டுகிறார் சுரேஷ். நீ பொம்பளையே இல்லை, இந்த வீட்டுக்கு வந்துடாத என சொல்கிறார்.
போலீசுக்கு செல்லும் மதி
அதன் பின் சுரேஷ் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கே மதி செல்கிறார். அங்கு தனது கணவர் பற்றி புகார் அளிக்க வேண்டும் என சுரேஷிடமே சொல்கிறார்.
அதை கேட்டு அதிர்ச்சியில் ஆடிப்போகிறார் சுரேஷ். இனி என்ன நடக்கும்? ப்ரோமோவை பாருங்க.






