போராட்டத்திற்கு பிறகு தமிழுக்கு பிறந்த குழந்தை, ஆனால் எதிர்ப்பாரா திருப்பங்களுடன்… சின்ன மருமகள் சீரியல் புரொமோ

சின்ன மருமகள்
நன்றாக படித்து மருத்துவராகி ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் இருக்கும் தமிழ்ச்செல்வி என்ற பெண்ணின் வாழ்க்கை கதையாக அமைந்தது தான் சின்ன மருமகள்.
குடும்ப சூழ்நிலையால் எதிர்ப்பாராமல் அவருக்கு திருமணம் நடக்க அதனால் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்.
இப்போது கதையில் சேது தொடர்ந்து நம்பிக்கை இல்லாமல் தன்னை அவமானப்படுத்துவதால் அந்த குடும்பத்தையே தலைமூழ்கிவிட்டு தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிடுகிறார்.
சேது ஐஸ்வர்யாவை திருமணம் செய்ய முடிவு எடுக்க அந்த நேரம் விபத்தில் சிக்கி தவிக்கிறார் தமிழ். அந்த நேரத்தில் சேது ரோட்டில் தமிழ்ச்செல்வியை பார்த்து பதறி மருத்தவமனை அழைத்து செல்கிறார்.
புரொமோ
தற்போது சின்ன மருமகள் புரொமோவில், தமிழ்ச்செல்வி பிரசவ வலியில் துடிக்க சேது கணவர் என்று கையெழுத்து போடுகிறார். பிரசவ அறைக்கு சென்று தமிழ் அனுபவிக்கும் கஷ்டத்தை பார்க்கிறார்.
பின் சேதுவிடம் அப்பத்தா உனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என குழந்தையை கொடுக்கிறார்.






