ஜனனி எடுத்த அதிரடி முடிவு, படு ஷாக்கில் ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
குணசேகரன் தன் மீது போடப்பட்ட வழக்கில் இருந்து தப்பிக்க என்னை மாதிரி ஒரு நல்லவன் கிடையாது என்ற அளவிற்கு நன்றாக நடித்து வருகிறார்.
சொத்திற்காக அவரது தம்பிகளும் அண்ணன் காட்டும் வழியில் வழக்கம் போல் சென்றுகொண்டிருக்கிறார்கள். இத்தனை நாள் கட்டிய கணவனை கூட எதிர்த்து ஜனனிக்கு ஆதரவாக இருந்த நந்தினி-ரேணுகா ஈஸ்வரி உடல்நிலைக்காக எதுவும் நடக்காதது போல் இருக்கிறார்கள்.
ஈஸ்வரி தான் எல்லாம் மறந்து குணசேகரன் சொல்வதற்கு ஆடுகிறார் என்றால் நந்தினி-ரேணுகாவும் மாறிவிட்டார்கள். 3 பேரும் வழக்கை வாபஸ் பெற கையெழுத்து போட்டதால் ஜனனி மிகுந்த மன வேதனையில் உள்ளார்.
புரொமோ
குணசேகரன் நாடகத்தை தாங்க முடியாத ஜனனி, மதிவதனியை சந்தித்து பேசுகிறார். உங்களது வீட்டை யாரோ கண்கானிக்கிறார்கள், அப்போது பேசிய வீடியோ எல்லாம் வெளியானது என்கிறார்.
பின் மதிவதனி, ஈஸ்வரி எல்லாவற்றையும் மறந்து தானே போனார் அவரிடம் கொஞ்சம் கொஞ்சமாக உண்மையை சொல்லிவிடுங்கள் என கூற ஜனனியும் அதிரடி முடிவு எடுக்கிறார். ஈஸ்வரியிடம் நீங்கள் மருத்துவமனை போனதே உங்கள் கணவரால் தான், அவர் தான் உங்களை கொலை செய்ய பார்த்தார்.
உங்களுக்கு Short Term Memory Loss என ஜனனி அனைத்து விஷயத்தையும் கூற குடும்பத்தினர் ஷாக் ஆகிறார்கள்.






