பாண்டியன் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
குடும்பம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என உதாரணம் காட்டும் வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
இப்போது கதையில் கோமதி-பாண்டியனின் சண்டை நீண்ட நாட்களாக தொடர்ந்து வருகிறது. முதலில் தான் செய்த விஷயத்திற்காக மன்னிப்பு கேட்டுவந்த கோமதி எவ்வளவு கெஞ்சுவது என கோபமாக உள்ளார்.
இந்த பிரச்சனையில் கதிர்-செந்தில், கோமதிக்காக பாண்டியனை கேள்வி மேல் கேள்வி கேட்க அவர் நான் கொடுத்த ரூ. 10 லட்சத்தை திருப்பி தர வேண்டும் என கூறியுள்ளார், இதனால் பணத்திற்கு என்ன செய்வது என இருவரும் குழம்பி போய்யுள்ளனர்.
எபிசோட்
நேற்றைய எபிசோடில், யாரும் எனக்கு சமைக்க வேண்டாம் என வெளியில் இருந்து சாப்பாடு வாங்கிவந்து சாப்பிட்டார் பாண்டியன். இன்றைய எபிசோடில் வெளியில் இருந்து காபி வாங்கிவந்து வீட்டில் உட்கார்ந்து குடிக்கிறார்.
வடை, காபி வாங்கிக்கொண்டு வந்து அரசி, காந்திமதி, ராஜி 3 பேருக்கும் கொடுத்துவிட்டு சாப்பிடுகிறார்.
அதைப்பார்த்த கோமதி வருத்தத்தில் சமையல் அறை சென்று அழுகிறார். அவரது கஷ்டத்தை புரிந்துகொண்ட கதிர் அம்மாவிடம் சென்று அவரை சமாதானப்படுத்துகிறார். கோமதி தனது மகன் மீது சாய்ந்து அழுகிறார்.
பின் சரவணன் தனது தோழியை கோவிலில் சந்திக்கும் காட்சியும் அதனை மயில் அப்பா பார்க்கும் காட்சியும் இடம்பெறுகிறது.






