எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியேறும் ஹீரோ சக்தி.. அடுத்த ஹீரோ யார்?

எதிர்நீச்சல் சீரியல்
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் தற்போது ஈஸ்வரிக்கு தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு காரணம் ஆதி குணசேகரன் தான் என தர்ஷினி போலீசிடம் புகார் அளிக்கிறார். மேலும் பார்கவி கனடாவிற்கு சென்றுவிட்டார் என ஜீவானந்தம் தர்ஷனிடம் கூறுகிறார்.
வெளியேறும் ஹீரோ சக்தி?
இந்த நிலையில், சக்தி கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சபரி, எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல் இணையத்தில் உலா வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். மேலும் அடுத்த ஹீரோ யார் என்கிற கேள்வியும் எழுந்துவிட்டது.
ஆனால், அது உண்மையான தகவல் இல்லை என்றும், இது வதந்திதான் என்றும் தெரிகிறது. இந்த சீரியலில் இருந்து அவர் வெளியேறப்போவதாக அறிவிப்பும் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.