AI-ஆல் கடும் அப்செட்டில் நடிகர் தனுஷ்.. கடும் கோபத்துடன் வெளியிட்ட அறிக்கை

நடிகர் தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடித்த ஹிந்தி படம் ராஞ்சனா 2013ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ஆகும்.
இந்த படம் தனுஷ் கெரியரில் முக்கிய படமாக இருந்து வருகிறது. தற்போது ராஞ்சனா படத்தின் கிளைமாக்ஸை ஏஐ மூலமாக மாற்றம் செய்து ரீரிலீஸ் செய்து இருக்கின்றனர்.
தனுஷ் கோபமான அறிக்கை
AI மூலமாக இப்படி கதையை மாற்றியது பற்றி தனுஷ் கோபமாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
“இது என்னை முற்றிலும் பாதித்து இருக்கிறது. நான் எதிர்ப்பு தெரிவித்த பிறகும் அவர்கள் இப்படி செய்து இருக்கிறார்கள். 12 வருடங்களுக்கு முன்பு நான் ஒப்புக்கொண்ட படம் இது இல்லை.”
“வருங்காலத்தில் இதை தடுக்க சட்டங்கள் வர வேண்டும்” என தனுஷ் கூறி இருக்கிறார். அவரது அறிக்கை இதோ.