ஜனனிக்காக ஈஸ்வரியிடம் கோபமாக சண்டை போட்ட சக்தி… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
குடும்பம் என்றால் எப்படி இருக்க கூடாது என்பதை காட்டும் வகையில் இப்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கதைக்களம் அமைந்து வருகிறது.
முதலில் ஆணாதிக்க எண்ணம் கொண்ட குணசேகரன் தனது தம்பிகளை சொத்தை காட்டி அடிமைப்படுத்தி, வீட்டுப் பெண்களையும் அடிமைப்படுத்தி வந்தார். அதற்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என கொலை செய்ய கூட துணிந்தார்.
ஆண்கள் தான் உறவு என்றால் என்ன தெரியாமல் இருந்தார்கள், ஆனால் வெவ்வேறு வீட்டில் இருந்து வந்தாலும் அக்கா-தங்கைகளாக குணசேகரன் வீட்டுப் பெண்கள் இருந்தார்கள், ஆனால் அதுவும் இப்போது சுத்தமாக போய்விட்டது.
புரொமோ
இப்போது கதையில் குணசேகரன் வழக்கில் முக்கிய ஆதாரவமாக இருந்த ஈஸ்வரி சுத்தமாக மாறிவிட்டார்.
அவருக்கு பிறகு தர்ஷினி தான் அடுத்த ஆதாரமாக இருந்தார். ஆனால் அவரோ இப்போது கடத்தப்பட்டுள்ளார், அவரை கடத்தியது யார் என்பது தெரியவில்லை. இதற்கு இடையில் கதிர் போலீசில் தர்ஷினி குறித்து புகார் கொடுத்து ஜனனி மீது சந்தேகம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
வீட்டில் குடும்பத்தினர் முன்னிலையில் ஈஸ்வரியிடம் யார் மீது சந்தேகம் என கேட்க அவர் ஜனனி தான் கடத்தி வைத்துள்ளார் என்கிறார். அதைக்கேட்ட சக்தி கோபத்தில் என்ன பேசுகிறீர்கள் அண்ணி என கோபப்படுகிறது.
இதோ இன்றைய எபிசோடின் பரபரப்பான புரொமோ,






